முகப்பு
எழுத்தில் என் மனம்
கோட்டை பிரபு
எழுத எத்தனிக்கிறேன்
எதையெல்லாமோ எழுத நினைக்கிறேன்
எழுதுகோல் எனது கரத்தில் இருக்கும் வேளை
எந்தச் சொல்லும்
என் எண்ணத்திலில்லை!
முயற்சிக்க முயல்கிறேன்…
என் மன வேகம்
எங்கோ தொடங்கி
எங்கெல்லாமோ விரவி
எதிர்திசையில் திரும்பும் வேளை
எவ்வளவோ தூரம் கடந்து வந்த பிரமை
எதிhப்;பட கடக்க முயன்றும் பயனில்லை.
வந்த திக்கில் தொடரலாம் எனும் போது
நகர மறுக்கும் மனம்
அவ்விடத்தை இறிய
அங்கும் இங்குமென விழிகள் திரும்பும்
அதில் ஒரு மிரட்சி!
சுற்றிலும் கருப்பு வெளிச்சம்!!
தொலைவில் புள்ளியாய் ஒளிக்கற்றை
தானாக அடிபோடுகின்றன கால்கள்
நடையின் இறுதிக்கட்டம்
இடைவெளியின் இடைவெளி குறைய குறைய
நடுங்கும் கால்கள் நடையைத் தளர்த்த
முழுவதுமாய் மூழ்குகிறேன்
ஒளியினூடே ஒளியாய் நானும் அங்கே!
மீண்டு மீண்டும்
எழுத எத்தனின்கிறேன்…!!
எண்ணம்: கோட்டை பிரபு