|
|
முகப்பு
கடைசி வரை யாரோ?
சுதர்மன்
கையும் காலும்
முடங்கிப் போனால்
உடலும் உயிரும்
என்ன செய்யும்
பரிவும் உறவும்
முறிந்து போனால்
பணமும் காசும்
என்ன செய்யும்
நாடும் வீடும்
மறந்து போனால்
பாடும் பலமும்
என்ன செய்யும்
கண்ணும் காதும்
இருண்டு போனால்
கனவும் நினைவும்
என்ன செய்யும்
பற்றும் பாசமும்
காட்டி வாழ்ந்தால்
கடைசி காலம்
வரை அது தேடிவரும்
கவிஆக்கம்: சுதர்மன்
|
|
Today, there have been 7 visits (8 hits) on this page!
|
|
இது கவிதைப்
பிரியர்களுக்கான முகவரி |
|