உன் கவிதை
     விட்டு விடுதலையாகி...
     மெழுகுவர்த்தி
     வாழ்வின் பயணம்
     குட்டிதேவதை
     => மேகமாய்
     தொடரும் வாழ்வினில்
     எழுத்தில் என் மனம்
     சோம்பலை துடைத்தெழு!
     அன்பு
     கடைசி வரை யாரோ?
     முடிவுரை
     பெண்
     இளையச் சமுதாயமே
     ஞாபகத்தில்
     வானம் போட்ட வடுக்களே வலிமை!
     நடிப்பு
     தொலைச்சிட்டுத் ...
     உறவு
     திறவு கோல்
     நள்ளிரவு நகரம்!
     விளங்கா பொருள்
     தனித்தமிழ் வேட்கை!..
     சிலேடை வெண்பா



soul - குட்டிதேவதை


                               முகப்பு

குட்டிதேவதை


பாண்டித்துர

 

புன்னகையை சுமந்து வருகிறாள்
அறிமுகம் இல்லாமலே - என்
அகம் தொட எத்தனிக்கிறாள்.

எப்படியும் முடிகிறது - அவளின்

உலகத்தினுள் எனை கடத்த

ஜன்னல் வெளி பேசுகிறாள்
பறந்து சென்ற பறவைக்காக

அவள் சொன்ன கதைகளையெல்லாம்
டெடிபீர் பொம்மைகள்
எனக்கு தெரிந்திடாத வண்ணம்
எங்கே ஒளித்து வைத்துள்ளதோ!

முகத்தை சுழித்து நாக்கை துருத்தி

அவளுக்கான சில்மிசங்கள்
வெறுமையை ஆக்ரமிக்கிறது.

பொம்மையை தட்டிக்கொடுத்து

கண்ணயரச்செய்த பின்னே
பெரியமனுசி கொட்டாவி விடுகிறாள்

அவளுக்கான உலகில்
எண்ணற்ற ரகசியங்கள்
புதைந்து கிடக்கின்றன

எப்போதாவது ஒன்றுதான்
என்னால் தோண்டியெடுக்கப்படுகிறது.

ஆக்கம்: பாண்டித்துர

Today, there have been 7 visits (9 hits) on this page!

இது கவிதைப்
பிரியர்களுக்கான முகவரி