உன் கவிதை
     விட்டு விடுதலையாகி...
     மெழுகுவர்த்தி
     வாழ்வின் பயணம்
     குட்டிதேவதை
     தொடரும் வாழ்வினில்
     எழுத்தில் என் மனம்
     சோம்பலை துடைத்தெழு!
     => மறு நடவு
     அன்பு
     கடைசி வரை யாரோ?
     முடிவுரை
     பெண்
     இளையச் சமுதாயமே
     ஞாபகத்தில்
     வானம் போட்ட வடுக்களே வலிமை!
     நடிப்பு
     தொலைச்சிட்டுத் ...
     உறவு
     திறவு கோல்
     நள்ளிரவு நகரம்!
     விளங்கா பொருள்
     தனித்தமிழ் வேட்கை!..
     சிலேடை வெண்பா



soul - சோம்பலை துடைத்தெழு!


                               முகப்பு

சோம்பலை துடைத்தெழு!

 

                           அகரம் அமுத

 

பொன்பெறும் பொழுதினை போக்குகிறாய் - மனம்

பொறுப்பிலா தனத்தினைத் தேக்குகிறாய்!

உன்பலம் அறியா துறங்குகிறாய் - மதி

ஓம்விட ஏனோ தயங்குகிறாய்

 

குருதியை வியர்வாய் சிந்தாமல் - வியர்

குளத்தினை குருதியாய் கருதுகிறாய்

சிறுதுயர் வரினும் சோர்ந்திடுவாய் - அது

சிறுமை என்பதை மறந்திடுவாய்

 

மண்ணை முட்டா சிறுவிதையும் - தளிர்

வளர்த்தே மரமாய் வருவதில்லை

சிந்தை செய்யா சிறுமதியால் - சிறு

துரும்பைப் பெயர்க்கவும் முடிவதில்லை!

 

முடவனும் முயன்றால் மலைதுரும்பு நகர்ந்(து)

உருக(ல்)லை சிதைத்திடும் சிற்றெரும்பு

 கடவுளும் உதவார் மலைத்தவர்க்குஇதை

கருத்திடு! சோம்பல் குணமொதுங்கு!

 

ஒட்டும் மண்தான் ஒட்டுமெனும் - ஒரு

ஓட்டைப் பழமொழி சொல்லாதே!

முற்றும் அதையே நம்பாதே பி(ன்)னம்

முதுமையில் துடித்தே வெம்பாதே!

 

காலம் என்பது உயிராகும் - அது

விழுந்தால் முளைக்கா மயிராகும்

மூலை எள்ளவர்க் குலகாகும் - இதை

முற்றும் உணர்ந்தால் உயர்வாகும்!

 

 

 

கவிதை: அகரம் அமுத

 

 

Today, there have been 7 visits (11 hits) on this page!

இது கவிதைப்
பிரியர்களுக்கான முகவரி