|
|
முகப்பு
நடிப்பு
- க.முத்துக்குமரன்
இரவல் வாங்கிய
கைக் குழந்தையோடு
“இரவல் தாய்”
வேடமிட்டாள்
பெண் ஒருத்தி…
இரவல் குழந்தையை
அலற வைத்து
அவள் நடத்தியதோ
“யாசித்தல்”….
இரவல் குழந்தையின்
உதடுகள் அழுதாழும்
உள்ளம் மட்டும்
சிரித்து….
நடைபயிலாத
நாம் கூட
இரண்டு குடும்பங்களுக்கு
உதவி செய்கிறோமே…
கட்டாய நடிப்பினால்
அது போதுமென்று…
- க.முத்துக்குமரன்
|
|
Today, there have been 7 visits (17 hits) on this page!
|
|
இது கவிதைப்
பிரியர்களுக்கான முகவரி |
|