உன் கவிதை
     விட்டு விடுதலையாகி...
     மெழுகுவர்த்தி
     வாழ்வின் பயணம்
     குட்டிதேவதை
     தொடரும் வாழ்வினில்
     எழுத்தில் என் மனம்
     சோம்பலை துடைத்தெழு!
     அன்பு
     கடைசி வரை யாரோ?
     முடிவுரை
     பெண்
     => தொட்டாற் சிணுங்கியே!
     => காதல் வந்த நாள் முதல்
     இளையச் சமுதாயமே
     ஞாபகத்தில்
     வானம் போட்ட வடுக்களே வலிமை!
     நடிப்பு
     தொலைச்சிட்டுத் ...
     உறவு
     திறவு கோல்
     நள்ளிரவு நகரம்!
     விளங்கா பொருள்
     தனித்தமிழ் வேட்கை!..
     சிலேடை வெண்பா



soul - பெண்


முகப்பு

பெண்

 கோ.கண்ணன்

உளி வேண்டாம்

 

ஒரு

துளி மட்டும்

உன்னிடம்

தந்தால் போதும்

 

உயிர்சிலை

செய்து தரும்

அதிசய சிற்பி நீ!

 

என்னிடம்

இறைவனை விடவும்

உயர் நிலை

உனக்குத்தான்

 

உலகையும்

உயிர்களையும்

இறைவன் படைத்ததாய் - ஒரு

நம்பிக்கை

 

எந்த இறைவனும்

தன்னுள்

இன்னுமொரு

உயிர் சுமந்ததாய்

சான்றுகளில்லை

 

எல்லா சாமிகளும்

கருவறைக்குள்

அடைந்திருக்கும் போது

 

கருவறையே

உனக்குள்

அடைந்திருக்கிறதே.

 

இப்போது

ஒப்புக்ககொள்

நீ

இறைவனை விடவும்

உயர்நிலையானவள்!

கவிஞர்: கோ.கண்ணன்

Today, there have been 7 visits (19 hits) on this page!

இது கவிதைப்
பிரியர்களுக்கான முகவரி